ஆன்லைன் விமர்சனங்களை இனிமேல் படிக்க மாட்டேன்.. கார்த்திக் சுப்புராஜின் ஆதங்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த ’ரெட்ரோ’ திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையில், ஒரு சில ஆன்லைன் விமர்சகர்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனத்தை தந்துள்ளனர். இதனை அடுத்து "இனிமேல் ஆன்லைன் விமர்சனங்களை படிக்க மாட்டேன்" என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியான ’ரெட்ரோ’ திரைப்படத்தில் ரொமான்ஸ், காமெடி, சண்டை என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் கலவையாக இருந்துள்ளது.
மேலும் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 46 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாகவும், அதன் பின்னர் நல்ல வசூலை செய்து வருவதாகவும் டிரேடிங் வந்தார்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ், “ரெட்ரோ படத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால் இனிமேல் ஆன்லைன் விமர்சனங்களை படிக்கவே கூடாது என்பதுதான். ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது என்பது திரையரங்கம் சென்றால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் படகுழுவினரின் மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே ஆன்லைனில் நெகட்டிவ் ஆக வேண்டும் என்றே விமர்சனம் செய்கின்றனர். எனவே இனிமேல் ஆன்லைன் விமர்சனங்களை நான் படிக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments