ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியும் அதனையடுத்து ஒருசில வாரங்களில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான '2.0' திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயகக்த்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு சூப்பர் ஸ்டார்களும் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ஏற்கனவே அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ள நிலையில் தற்போது ரஜினி படமும் உறுதியானால் ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு புதிய அவதாரங்கள்

ரஜினிகாந்த் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து டுவிட்டரில் உள்ளார். அவர் இருக்கும் ஒரே சமூக வலைத்தளம் இதுமட்டுமே என்பதும், இந்த பக்கத்தில் 4.58 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி மறைவுக்குக் பின் ஜான்வி கொண்டாடிய நெகிழ்ச்சியான பிறந்த நாள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம், ஆனால் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.ghter J

ராணுவம் வந்தாலும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் ஆவேசம்

பெரியார் சிலை உடைப்பு குறித்து பாஜகவின் எச்.ராஜா நேற்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் சிலை விவகாரம்: முழு பூசணிக்காயை மறைக்கும் எச்.ராஜா

நேற்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை? மன அழுத்தம் காரணமா?

அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.