ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' படத்தில் கார்த்தி?

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

பிரபல நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் மிகச்சிறப்பாக வெளியானது. முதல்கட்ட விமர்சனத்தில் ஜிப்ரானின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியும் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஆம், இந்த படத்தின் பாடல் ஒன்றை கார்த்தி பாடியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'குபு குபு குபு' என்று தொடங்கும் பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். கார்த்தி மட்டுமின்றி இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்களும் பாடியுள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களின் விபரங்கள் பின்வருமாறு:

* அடி வாடி திமிரா என்ற உமாதேவி எழுதிய பாடலை கோல்ட் தேவராஜ் பாடியுள்ளார்

* காந்தாரி யாரோ' என்ற தாமரை எழுதிய பாடலை பத்மலதா, அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியுள்ளனர்.

*புல்லட் சாங் என்ற பாடலை புல்லட் ஷா என்பவர் எழுத, அதை யாசின் நசீர், சென்னை குவாலி கிட்ஸ் குழுவினர் பாடியுள்ளனர்.

*கருகருன்னு' என்று தொடங்கும் பாடலை இயக்குனர் பிரம்மா எழுத பானுப்ப்ரியா, நமிதாபாபு, கோல்ட் தேவராஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

* காரட்டு பொட்டழகா' என்ற பாடலை பிரம்மா எழுத அதை ஊர்வசி, நமிதா பாபு, கோல்ட் தேவராஜ் பாடியுள்ளனர்.

*டைம் பாஸூக்கோசரம்' என்ற பாடலையும் பிரம்மா எழுத அதை சரண்யா பொன்வண்ணன், பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர்.

More News

ரூ.20 கோடி மோசடியா? தீபாவிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஜெ.தீபா. இவரது வீட்டின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டர்கள் குவிந்ததை அனைவரும் அறிவர்...

உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மாயா', 'டோரா'வை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு நாயகி சப்ஜெக்ட் திரைப்படம் 'அறம்'...

விவசாயிகளுக்காக செயலில் இறங்கிய நடிகை சினேகா

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

இரண்டாவது வாரத்திலும் பவரான வசூல் செய்த 'பவர்பாண்டி'

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'பவர்பாண்டி' படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்பதை பார்த்தோம்.

சிபிராஜின் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவ காணோம்' படங்களுக்கு அடுத்து சிபிராஜ் தற்போது 'நாளைய இயக்குனர்' புகழ் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...