கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'கமல்ஹாசனின் டிவி உடைக்கும் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், யாருக்கு ஓட்டு போட சொல்கின்றார்களோ? அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார். அவருடைய இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே, அனிதாவின் சகோதரர், 'திருமாவளவனுக்கு ஓட்டு போடுவேன்' என்று கூறினார். எனவே திருமாவளவனுக்காக பிரச்சாரம் செய்து ஓட்டு போட கூறிய கமல்ஹாசனுக்கு நன்றி! அவர் இன்னும் இதே போன்ற அதிக வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கிண்டலாக கூறியிருந்தார்.

இதே கரு.பழனியப்பன் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கமல்ஹாசன் குறித்து பேசும்போது 'கமல்ஹாசன் வித்தியாசமாக சிந்திக்கின்றார். அதனால் அவர் குறி வைத்து தாக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் இன்று கமல்ஹாசனை குறி வைத்து தாக்கும் நபர்களில் ஒருவராக கமல் மாறியுள்ளதாக பழைய வீடியோவை பதிவு செய்து நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
 

More News

மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா.

அருள்நிதியின் 'K13' சென்சார் தகவல்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் த்ரில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'K13'

பாரீஸ் நோட்ரே டேம் சர்ச் தீவிபத்து: பிரபல தமிழ் நடிகை வருத்தம்!

நேற்று மாலை பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் உள்ள பழமையான நோட்ரே டேம் சர்ச்சில் ஏற்பட்ட தீவிபத்து உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற பழமையான பாரீஸ் சர்ச்சில் தீவிபத்து!

உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பாரீஸ் நோட்ரே டேம் கேதட்ரல் சர்ச் நேற்று தீவிபத்தால் சேதமடைந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.