சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,April 03 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமந்தா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிகர் கருணாகரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  இவர் ஏற்கனவே ரவிகுமார் இயக்கிய 'இன்று நேற்று நாளை' படத்தில் புலிவேட்டி ஆறுமுகம் என்ற ஜோதிடர் வேடத்தில் நடித்து கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் இதுவரை சூரி, சதிஷ் ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கருணாகரன் இணைந்துள்ளதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே ஒரு நன்றி சொல்ல அமெரிக்காவுக்கு பறந்த சமந்தா

திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஷாலினிஅஜித் பாதையில் பயணிக்க விருப்பம்: மிஷ்கின் பட நாயகி

மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி' படத்தில் நடித்த நடிகை ஸ்வாதிஷ்டா தற்போது ஜீவா நடித்து வரும் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கஸ்தூரி கூறும் தல, தளபதியின் மைனஸ்களை ரசிகர்கள் ஏற்பார்களா?

நடிகை கஸ்தூரி படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அவ்வப்போது டிரெண்டிங்கில் இருப்பார்.

அஜித்தை அடுத்து பிரபல நடிகரின் படத்தில் அக்சராஹாசன்

ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழக அரசை நம்புகிறோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.