close
Choose your channels

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவரது உறவினர்களும் திமுகவினர்களும் இன்னும் சோகத்தின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவரகள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாள் அவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தயாளு அம்மாள் அவர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரிக்க ராஜாத்தி அம்மாள், செல்வி, கனிமொழி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சற்றுமுன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.