ரஜினிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது ஏன்? கருணாஸ் கருத்து

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என 66 லட்சம் வருமானவரி அலுவலகம் அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து ரஜினிகாந்த் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்ய, இந்த அபராதத்தை வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது

ஆனால் இதனை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென வருமான வரித்துறை இந்த வழக்கை வாபஸ் பெற்றது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராத தொகை இருப்பதால் இந்த வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அறிவித்தது. மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத்தொகை இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என அரசு கொள்கை முடிவு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது

ஆனால் ரஜினிகாந்த் அவர்களுக்காகவே மத்திய அரசு இந்த சலுகை காட்டி உள்ளதாகவும் அவருக்காகவே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் இருந்தால் விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு சலுகை அளித்திருப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியபோது ’நடிகர் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பேசுவதால் வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்து இருக்கலாம்’ என்று கூறியுள்ளார். கருணாஸின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 

More News

ரஜினி கட்சியுடன் கூட்டணியா? டாக்டர் ராமதாஸ் பதில் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும்

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டது; சீன அதிபர் ஷி ஜின்பிங் மருத்துவமனையில் ஆய்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

தாத்தாவாக புரமோஷன் ஆன பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தாத்தாவாக பிரமோஷன் ஆகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரே படத்தில் இணையும் இரண்டு பிரபல நடிகைகள்

கோலிவுட் திரையுலகில் ஒரே படத்தில் இரண்டு பிரபல நடிகைகள் இணைந்து நடிப்பது அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்தான் என்ற வகையில் தற்போது அதே போல் இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் 

ஒரே செல்பியால் சூப்பர் ஸ்டாராக மாறிய தளபதி விஜய்

தளபடி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்கிறது என்பது உள்ளூர் விஜய் ரசிகர்கள் பலருக்கே தெரியாமல் இருந்தது