இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் பிற பகுதிகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி தினமும் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கூட சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் அவர்களுக்கும், திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் ஒரு திமுக எம்எல்ஏ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு பரவியுள்ளதால் தமிழகத்தில் என்ன நடக்குது? என்ற கேள்வியே எழுந்துள்ளது

More News

மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில்

கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார்

16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது

புனே அருகே ஒரு பெண் தனது 16 வயது மகளை தனது உறவினர் பெண் வீட்டில் ஊரடங்கு நேரத்தில் விட்டு சென்று உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விட்டுச்சென்ற அந்த பெண்