'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட மாட்டோம்: நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

’காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’காசேதான் கடவுளடா’. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.

இந்த நிலையில் சென்னை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் ’காசேதான் கடவுளடா’ படத்தை எடுப்பதற்காக தன்னிடம் ரூ.1.75 கோடி கடன் பெற்றதாகவும் ரிலீசுக்கு முன்னரே இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்

ஆனால் ஒப்பந்தத்தை மீறி இந்த படத்தை பணம் கொடுக்காமல் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மீதித்தொகை கொடுக்கும் வரை இந்த படத்தை வெளியிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம் என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு மார்ச் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

More News

03.03.2023 அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ்: சிம்பு பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!

சிம்பு நடித்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வரும் மார்ச் மூன்றாம் தேதி அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.

சீரியலுக்கு வரும் விஜய் தந்தை.. ராதிகா தான் ஜோடியா? டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி.. மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதானா?

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை சமீபத்தில் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக  ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. விக்னேஷ் சிவனின் தத்துவங்கள்..

 இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில தத்துவங்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை.. கணவர் வீரேந்திர சவுத்ரி ஆதங்கம்..!

 நடிகை நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவரை  கிளாமருக்காக கமர்சியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும் அவரது நடிப்பு திறமையை யாரும் வெளிப்படுத்தவில்லை