45 வயது ஹீரோவுக்கு அம்மாவாக 50 வயது கஸ்தூரி.. கதையை கேட்டதும் ஓகே சொன்னாரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


45 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிகை கஸ்தூரி நடித்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ’டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சந்தானம் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த போது, ’இந்த படத்தில் என்னுடைய அம்மா, அப்பா கேரக்டரில் நிழல்கள் ரவி மற்றும் கஸ்தூரி மேடம் நடித்திருக்கிறார்கள். தங்கை கேரக்டரில் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்’ என்றும் கூறினார்.
குறிப்பாக அம்மா கேரக்டரில் கஸ்தூரி நடிப்பது குறித்து கூறிய சந்தானம், ’எனக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னதும், ’என்னது, நான் சந்தானத்திற்கு அம்மாவா?’ என்று கஸ்தூரி ஷாக் ஆகினார்கள். அதன் பிறகு, அவரிடம், ’கதையை கேட்டு முடிவு சொல்லுங்க’ என்று கதையை சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்து விட்டார்கள். இந்த படத்தில் அவங்க கேரக்டரில் தான் திடுக்கிடும் திருப்பம் உள்ளதாகவும், அதனால்தான் அவர் ஓகே சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
45 வயது சந்தானத்திற்கு, 50 வயதாகும் கஸ்தூரி அம்மாவாக நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com