தமிழர் அல்லாதவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? கஸ்தூரியின் நெத்தியடி கேள்வி

  • IndiaGlitz, [Saturday,June 17 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை கஸ்தூரி பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: அரசியலுக்கு திரையுலகினர் வரவேண்டும் என்று நான் கூரை மீதேறி குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் வரும்போது என் உடன் பிறவா திரையுலக சகோதர, சகோதரிகள் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்களும் மனிதர்கள் தானே, அவர்களை மட்டுமே வேறு ஏதோ ஒரு ஜீவராசி போல் பார்க்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.

தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதோர் எந்த ஒரு தொண்டையும் செய்யக்கூடாது என்று பேச ஆரம்பித்தால் தமிழுக்கு அகராதி எழுதிய போர்த்துகீசியர், தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர், வந்தேறிகள் என்று சொல்லப்படும் பல தமிழறிஞர்கள் பாரதியார், தமிழ்த்தாத்தா உவேசா உள்பட பலர் புரிந்த தமிழ்த்தொண்டு என்ன ஆவது? இப்படியே போனால் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தமிழர் தவிர வேறு யாரும் விளையாடு முடியாத நிலை ஏற்படும். எனவே எல்லா விஷயத்திலும் பிரித்து பிரித்து பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' இவ்வாறு நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்: பணமழையில் நனையும் தனியார் சேனல்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனப்பான்மை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது...

அரவிந்தசாமி பிறந்த நாளில் 'இரட்டை விருந்து'

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களை அடுத்து நடிகர் அரவிந்தசாமி தற்போது 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கமல் 'சத்யா' போன்றே சிபிராஜ் 'சத்யா'வும் வித்தியாசமாக இருக்கும். சத்யராஜ்

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும் சிபிராஜின் தந்தையுமான சத்யராஜ் இந்த படம் குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு இணையாக கோலிவுட் திரையுலகில் தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்த வந்த நடிகர் பிரசாந்த் கடந்த ஆண்டு வெளிவந்த 'சாகசம்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது...

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்த த்ரில் படமான 'நெஞ்சம்  மறப்பதில்லை' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது...