close
Choose your channels

வேண்டும் என்றேதான் செய்தேன்: கார்த்தி செல்பி பிரச்சனை குறித்து கஸ்தூரி 

Monday, March 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்தில் செல்பி எடுத்த ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து விளக்கம் அளித்த நடிகர் கார்த்தி, 'செல்பி எடுக்கும்போது சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட பலருக்கு இல்லை என்று ஆதங்கமாக கூறினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 'ஜூலை காற்றில்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஸ்தூரி, கார்த்தியை அழைத்து கார்த்தியின் சம்மதம் கேட்காமலேயே செல்பி எடுத்தார். இதுகுறித்து மேடையிலேயே கார்த்தி தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '"ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க' என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.