கமல் பாணியில் குரல் கொடுத்த கஸ்தூரி

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று, ஊழல் இருக்கும் வரை சுதந்திரம் பெற்றாலும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு ஏராளமானோர் ஆதரவு கொடுக்க தயார் என்று பதிலளித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, கமல்ஹாசனின் டுவிட்டுக்கு அவர் பாணியிலேயே, 'குரல்கொடுத்தால் கைகொடுக்க காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு. ஓடிவருவர் கட்டளைக்கு கரைப்புரண்டே' என்று பதிலளித்துள்ளார்.

மேலும் 'மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு போலி சாமியாருக்குக் கூட 4 பேர் பின்னால் செல்கின்றபோது, நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேர் சென்றால் தவறு இல்லை என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.

ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர் ராஜினாமா செய்திட ஏன் மற்ற கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்ற கமல் கேள்விக்கு, 'அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான விஷயம் முதல் குட்கா ஊழல் உள்பட பல விஷயங்களில் இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தினந்தோறும் வலியுறுத்தி வரும் நிலையில் கமல் தனது டுவீட்டில் ஏன் அப்படி கூறினார்? என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

அருள்நிதியும் அரசியலில் குதிக்கின்றாரா?

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அரசியல் மேடையில் தலைகாட்டி வருகிறார்...

இயக்குனர் சுசீந்திரன் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் 'அறம் செய்து பழகு' என்ற தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்...

'விவேகம்' புதிய ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வு எடுத்து வருகிறார்...

இதுதான் இன்றைய மிகச்சிறந்த படம்: கமல்ஹாசன் பெருமிதம்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்றைய சுதந்திர தினத்தில் அரசியல் குறித்த சில பதிவுகளை தெரிவித்திருந்தாலும், சுதந்திர தினம் குறித்தும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்...