அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதில் ஆபாசமான வார்த்தைகளால் சமூக வலைத்தள பயனாளிகள் கஸ்தூரியை திட்ட, அதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் இது குறித்து தற்போது மேலும் அவர் பதிவு செய்துள்ள ஒரு டுவிட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் பெண்களை மதிக்கத் தெரிந்த அனைவருக்கும் எனது நன்றி.

இந்த விஷயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார். கஸ்தூரியின் இந்த வேண்டுகோளை அஜித் மற்றும் ஷாலினி ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் என்ற போர்வையில் ஒளிந்து, ஆபாசமான பதிவுகளை செய்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரியார்

மணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த உதவி!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் பாதிக்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் அவர்களில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..!

அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும்.

ஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..! இணையத்தில் வைரலான வீடியோ.

அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஹோட்டல் அறையில் எலியைக் கண்டவருக்கு வாயில் வார்த்தை வரவில்லை. ரிசப்ஷனுக்கு போன் செய்து 'என் ரூம்ல ஜெர்ரி இருக்கு வந்து உதவி பண்ணுங்கன்னு' மெசேஜ் பாஸ் செய்துவிட்டார்.

கலைமாமணி நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்

பழபெரும் நடிகை கலைமாமணி நாஞ்சில் நளினி நேற்று காலமானார்