படுத்தே விட்டானய்யா... கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

சென்னை மழை, பெருவெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தத்தளித்து வருகின்றனர். இன்னும் கூட சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் இது குறித்து கருத்து கூறிய போது, ’மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி.. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில் கூறியபோது, ’That படுத்தே விட்டானய்யா moment’. ‘மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது’ என்று கூறியுள்ளார்.

More News

'முண்டாசுப்பட்டி' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. காளி வெங்கட் இரங்கல்..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் 'முண்டாசுப்பட்டி'  படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மதுரை மோகன் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து

'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'அவள் ஒரு தொடர்கதை' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்த நடிகை லீலாவதி காலமானார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு: ரூ.1 கோடி கேட்டு மன்சூர் அலிகான் மனு..!

நடிகை த்ரிஷா உட்பட 3 பிரபலங்கள் மீது  நடிகர் மன்சூர் அலிகான் ரூபாய் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஃபைட் கிளப்' படத்தின் 'யாரும் காணாத' மெலோடி பாடல்.. நெகிழ வைத்த கோவிந்த் வசந்தா..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஃபைட் கிளப்' என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

கமல், ரஜினி கலந்து கொள்ள இருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பா? புதிய அறிவிப்பு..!

டிசம்பர் 24 ஆம் தேதி திரையுலகினர் ஒன்று சேர்ந்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த 'கலைஞர் 100'  விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.