close
Choose your channels

எல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை!

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரையும் பிரிந்துவிட்டதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அந்த வீடியோவில் அவர் பீட்டர் பாலை தான் இப்போதும் நேசிப்பதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார்

மேலும் நான் விரும்புவது அன்பு மட்டுமே என்றும் ஆனால் அது எப்போதுமே என்னிடமிருந்து சென்று விடும் என்றும், இந்த சவாலையும் நான் எதிர் கொள்வேன் என்றும் என்னுடைய குழந்தைகளை என்னுடைய துயரங்கள் பாதிக்காமல் வளர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார் மேலும் எலிசபெத் இடம் வருத்தம் தெரிவித்த அவர் அவரைப்பற்றி குறையும் சொல்லி இருந்தார்

இந்த நிலையில் ஏற்கனவே வனிதா-எலிசபெத் விவகாரம் குறித்து கருத்து கூறியிருந்த நடிகை கஸ்தூரி தற்போது இந்த வீடியோ குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தற்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன். நன்றாக எடிட் செய்யப்பட்டு பொருத்தமான டைட்டில் வைத்து, சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்பு என்றே புரியவில்லை. இதிலிருக்கும் அனைத்துமே பொய் மற்றும் தற்புகழ்ச்சி தான். எல்லோரும் கெட்டவர்கள், வனிதா மட்டுமே பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் வீடியோவில் உள்ள கருத்துக்கள் உள்ளன. அனைத்தும் நான் எதிர்பார்த்தது தான்

ஆனால் எலிசபெத்தை குறை சொல்வது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை. இந்த வீடியோவில் நான்கு விளம்பர இடைவேளை வைத்து நல்ல வருமானம் பார்த்து உள்ளார் என்பது மட்டும் உண்மை’ என்று கஸ்தூரி கூறியுள்ளார்

வனிதா வீடியோ குறித்து கஸ்தூரியின் இந்த வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.