close
Choose your channels

'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்! 

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுகுறித்த புரமோக்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த சீசனின் 14 போட்டியாளர்களும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்பதும் அவர்கள் குறித்த முழு தகவல்களையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நான்காவது சீசன் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் தனக்கு இன்னும் வரவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்தான் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செலவுக்கு உதவுவதற்காக தான் என்றும், ஆனால் இன்னும் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் தரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நான் எப்பொழுதுமே பொய்யான வாக்குறுதிகளை நம்புவது இல்லை என்று கூறிய கஸ்தூரி, சம்பள விஷயத்தில் இப்படி நடக்கும் என நான் எதிர் பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளரான கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என கூறியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos