close
Choose your channels

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு விலகினார் என்பதையும், அதனை அடுத்து கட்சியின் சார்பில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா விலகினார் என்பதை பார்த்தோம்.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் விலகிய நிலையில் நேற்று மேலும் 2 பேர் விலகினார்கள் என்பதும் இன்னும் ஒரு சிலர் விலக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கமலஹாசன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக கட்சியின் பிரமுகர்கள் விலகி கொண்டிருப்பது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கலாய்க்கும் வகையில் ஒரு பதிவு செய்துள்ளார்.

மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே. தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று கலாய்த்து உள்ளார். கஸ்தூரியின் இந்த டுவிட் பொது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.