ஊருக்குதான் உபதேசமா? ஆளுங்கட்சியினர்களின் அடாவடியை தட்டி கேட்கும் கஸ்தூரி

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் சேலம் நெடுஞ்சாலையில் மது அருந்திவிட்டு வாகனத்தில் சென்றுள்ளதை மடக்கிய பெண் போலீஸ் ஒருவர் அவரிடம் விசாரணை செய்கிறார்.

ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது? என பெண் காவலர் விசாரணை செய்ய அதற்கு அதிமுக பிரமுகர் “உன்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என திமிராக பதில் கூறியதோடு போலீஸ் எச்சரிக்கையையும் மீறி காரை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பி விடுகிறார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ‘ஊருக்குத்தான் உபதேசமா? என்ற கேள்வி எழுப்பி ஒரு டுவிட்டை பதிவு செய்துகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இவரு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளராம். அரசும் அமைச்சர்களும் அன்னாடம் மக்களை கெஞ்சிக்கிட்டுருக்காங்க. அவங்க கட்சிகாரங்களே மதிக்கலை. 144ல கூட சரக்குக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை போல. பெண்ணுன்னும் பாக்கல, போலீஸுன்னும் பாக்கல. அப்போ ஊருக்குதான் உபதேசமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே: கமல்ஹாசனின் 'நம்பிக்கை' பாடல் வரிகள்

கொரோனா தொற்றினால் அச்சம் அடைந்திருக்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும், 'அறிவும் அன்பும்' என்று தொடங்கும்

மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

கொரோனா வைரஸ் தயாரிக்கப்பட்டதல்ல!!! WHO கருத்து!!!!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

'என் ஜெயமோகன்': 'கரு பழனியப்பனுக்கு பதிலடி தருகிறாரா கமல்ஹாசன்!

நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் எழுத்தாளரும் திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்திருந்தார்.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தடை: உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வேலையிழப்புகளையும் பொருளாதார சிக்கலையும் சந்தித்து வருகிறது.