சாவுல கூட நியாயம் இல்ல.. கவின் ஆவேச டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து டுவிட் செய்த நடிகர் கவின், ‘சாவில் கூட நியாயம் இல்லை’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். அது மட்டுமின்றி அவரது நாக்கு அறுக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை அடுத்து அவசர அவசரமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் கூட இல்லாமல் போலீசார் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நீதிவிசாரணை செய்ய உபி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறிய நடிகர் கவின், ‘சாவில் கூட நியாயம் இல்லை’ என்று ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த டுவீட்டுக்கு ஆதரவு குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதே சம்பவத்தை கண்டித்து நடிகை வரலட்சுமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

துணை குடியரசு தலைவருக்கு கொரோனா தொற்று!!! மருத்துமனையில் அனுமதியா???

துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது

ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி திரைப்படம்: டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போய் இருந்த நிலையில் முன்னணி இயக்குனர்கள்

மும்பையில் புதிதாகப் பரவும் தடுப்பூசியே இல்லாத ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்!!! அதிர்ச்சி தகவல்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தாக்கம் கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளில்

'புதிய பாதை 2' ஹீரோ யார்? பார்த்திபனின் பரபரப்பு தகவல்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் திரைப்படம் 'புதிய பாதை'. கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இல்லை: தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த 1998ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி ரஞ்சித் நடிப்பில் பாரதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மறுமலர்ச்சி'. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து