close
Choose your channels

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது. இந்த நிலையில் இன்று கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் அந்தோணி பிக்பாஸ் வீட்டின் உள்ளே இன்று வருகிறார்.

கவினை நோக்கி பிரதீப் அந்தோணி கூறியபோது, ‘ஒரு கடமை பாக்கி உள்ளது. இவ்வளவு கேவலமா நீ ஆடின கேமுக்கு, மட்டமா ஒரு விஷயம் பண்ணினதுக்கு, உன்னை நம்புனவங்கள கைவிட்டதுக்கு, இங்க இருக்கின்ற எல்லாரையும் மனம் புண்படுத்தியதற்கு, நான் இப்ப ஒரு விஷயம் செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சுட்டு பெரிய ஆளா ஆயிட்டின்னா, என்னை மேடையில கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ’ என்று கூறிவிட்டு கவின் கன்னத்தில் பளார் என அறை விட்டார் பிரதீப்.

கவின் நண்பரின் இந்த செய்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக லாஸ்லியா கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே லாஸ்லியாவின் தந்தையின் வருகைக்கு பின் கவின் தனது தவறை உணர்ந்து, இனிமேல் நம்மால் யாரும் மனம் வருந்தக்கூடாது என்று முடிவெடுத்துள்ள நிலையில் நண்பரின் இந்த அறை விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.