close
Choose your channels

கல்யாணம் ஆன மாதிரியே தெரியலை: 'கயல்' ஆனந்தியின் கலகல பேட்டி!

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆனந்தி. இவர் சமீபத்தில் இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நான்கு வருட காதலுக்குப் பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் முதல்முறையாக நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கயல் ஆனந்தி சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். திருமணம் முடிந்து பத்தே நாட்களில் தனக்கு படப்பிடிப்பு ஆரம்பம் ஆகி விட்டதாகவும் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு மிகுந்த ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறினார்

நான் எங்கள் வீட்டில் எப்படி இருந்தேனோ, அதே போல் தான் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிலும் இருந்து வருகிறேன் என்றும் எனக்கு கல்யாணமான மாதிரியே தெரியவில்லை என்றும் எனக்கு கூடுதலாக ஒரு சப்போர்ட் கிடைத்துள்ளது என்பதை தவிர மற்றபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு எனது கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் எந்தவித தடையும் தெரிவிக்கவில்லை என்பதால் எனது நடிப்பு பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். கயல் ஆனந்தியின் இந்த கலகலப்பான சுவராசியமான பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.