பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள்: இருவருமே சிவகார்த்திகேயன் நாயகிகள்!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இருவருமே சிவகார்த்திகேயனுடன் நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்த ’ரஜினி முருகன்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த நிலையில் இன்று கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாளை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு சிறுவயது முதலே தோழியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறு வயதில் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தற்போது கல்யாணி பிரியதர்ஷன் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நான்கு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டீன் ஏஜ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே: 36 வயது டிடியின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில்

மணக்கோலத்தில் பவித்ரா-சுதர்ஷன்: புகைப்படத்தை அடுத்து வீடியோ வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும், வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறும்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....!ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி...!

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு குறித்த முக்கிய தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அண்ணாமலைக்கு ஆதரவாக செம டான்ஸ் ஆடிய 'கலா' மாஸ்டர்: வீடியோ வைரல்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நேற்று இரவு 7 மணி உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பதும் தெரிந்தது.

பட்டுவாடா நடக்கையில் பார்க்காம போய்ட்டனே....! நடிகை கஸ்தூரி டுவீட்...!

நாளை தேர்தல் நடக்கையில் இன்று பணப்பட்டுவாடா நடப்பதை பார்க்காமல் போய்ட்டனே என்று நடிகை கஸ்தூரி டுவீட் போட்டுள்ளார்.