லியோனல் மெஸ்ஸி, இன்று உங்கள் நாள்: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து அந்த அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டிசூட் முறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.

பெனால்டி ஷூட்டில் அர்ஜென்டினா அபார 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது என்பதும் இந்த அணி 3-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஏராளமான திரையுலக பிரபலங்களும் அர்ஜெண்டினா அணிக்கும் குறிப்பாக மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோனல் மெஸ்ஸி குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கால்பந்து மைதானத்தை அலங்கரித்த மிகச்சிறந்த வீரர் மெஸ்ஸிக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இது உங்கள் வாழ்வில் முக்கியமான போட்டி என்றும் அர்ஜென்டினாவுக்கு மட்டுமின்றி கால்பந்து உலகமே உங்களுடைய விளையாட்டு திறமைக்காக வாழ்த்துகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் லியோனல் மெஸ்ஸி இன்று உங்கள் நாள் என்றும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வரலாற்றை உருவாக்கி உள்ளீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

கோவிலில் பிச்சை எடுத்த சிறுவன் திடீரென கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.. எப்படி தெரியுமா?

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் வறுமை காரணமாக கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக தெரிய வந்தது பெரும்

சூடு பிடிக்கும் பிக்பாஸ்.. மீண்டும் ஓப்பன் நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் முடிந்து 71வது நாள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது

கமல்ஹாசன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெயம் ரவி.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படத்தில் நடிகர் ஜெயம்ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இணைந்த 'அவதார்' டெக்னீஷியன்!

 சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் 'அவதார்' படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை.. கண்கலங்கி இளையராஜா கூறிய விஷயம்!

இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் என இசைஞானி இளையராஜா கண் கலங்கியவாறு கூறிய விஷயம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.