close
Choose your channels

ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக பாதுகாக்கும் கீர்த்திசுரேஷ்

Sunday, July 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.எல்விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு வந்த காதல் கடிதம் ஒன்றை குறித்து தெரிவித்துள்ளார். தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது தீவிர ரசிகர் ஒருவர் தனக்குப் பரிசு கொடுத்ததாகவும், அந்த பரிசை பிரித்துப் பார்த்தபோது தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பமும் ஒரு காதல் கடிதம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது கூட எனக்கு ஒருவர் கூட காதல் கடிதம் கொடுக்கவில்லை என்றும் அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தான் பத்திரமாக வைத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.