close
Choose your channels

திருமணம் செய்யலாமா என கேட்ட ரசிகருக்கு புகைப்படத்தின் மூலம் பதிலளித்த நடிகை!

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் செய்து கொள்ளலாமா? என தொலைக்காட்சி நடிகை ஒருவரை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அதற்கு நாசுக்காக புகைப்படம் ஒன்றின் மூலம் அந்த நடிகை பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவர் கீர்த்திகா அண்ணாமலை. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’பாண்டவர் இல்லம்’ என்ற சீரியலில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’சுந்தரி’ சீரியலிலும் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்திகா அண்ணாமலை ரசிகர்களிடம் சமீபத்தில் உரையாடியபோது ரசிகர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’இவன் என்னுடைய மகன் சகோதரா’ என பதிலளித்துள்ளார். இதன் மூலம் அவர் நாசுக்காக ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

நடிகை கீர்த்திகா அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.