நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அட்டகாசமான தகவல்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய அவதாரம் எடுத்திருப்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதாவது தனது அக்கா ரேவதி தயாரிக்கும் “வாஷி“ எனும் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இதைத்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் new beginning and new journey என்று தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டு இருக்கிறார். பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் இளைய மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த நட்சத்திரக் குடும்பத்தின் மூத்த மகள் ரேவதி தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதையடுத்து தன்னுடைய அக்கா ரேவதி தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக இணைந்துள்ளார். “வாஷி“ எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு ஜி ராகவ் இயக்கவிருக்கிறார். இதில் “மாரி2“ படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது “வாஷி“ படத்தின் படப்பிடிப்பு துவங்கப் பட்டதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் புதிய தயாரிப்பாளர் ரேவதி, இயக்குநர் விஷ்ணு ஜி ராகவ், நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

More News

மனைவியுடன் பாக்சிங் செய்யும் வில்லன் நடிகர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சார்பாட்டா பரம்பரை“. இந்தப்

எனது நடனத் திறமைக்கு இதுதான் காரணம்… சாயிஷா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

தமிழ் சினிமா வட்டாரத்தில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் நடிகர் ஆர்யா- நடிகை சாயிஷா தம்பதியினருக்கு கடந்த ஜுலை

பயமுறுத்தும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ்… என்ன காரணம்?

கொரோனா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS-Cov-2 வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்

'ஆர்.ஆர்.ஆர்' டிரைலர் தேதியை அறிவித்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகள்: சிம்புவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

சிம்பு நடித்த 'மாநாடு'  திரைப்படம்' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.