நீண்ட நாள் கனவு நிறைவேறியது: பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷ் 

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, பாவாடை தாவணியில் ஸ்டில் ஒன்றை பதிவு செய்து கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இவர் தற்போது ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் தான் குருவாயூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததாகவும் தனது பெற்றோர்களிடம் தரிசனம் செய்தது திருப்தி அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்ட நாட்களாக பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற தனது கனவு இன்று நிறைவேறி இருப்பதாகவும் இதற்காக எனது டிசைனர் பூர்ணிமாவுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷை பார்த்த அவரது ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

புல்வெளிக்கு நடுவே தமிழ் பிக்பாஸ் நடிகை.. வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் 4 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

விஜய் விருதுகள் விழாவில் விருதுகளை அள்ளிய 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்படும் என்பதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்த விழா நடை பெறவில்லை என்பதால்

விஷாலின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன் 2' மற்றும் 'எனிமி' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தில் உள்ளன

இவனுங்க எல்லாம் ஜெயிச்சுட்டு என்னத்த புடுங்குவாங்க: 'கோடியில் ஒருவன்' டிரைலர்

விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது.

wifi முதல் ஜவுளிப்பூங்கா வரை அமைக்கப்படும் ...!  மதுரையில் பிரதமர் மோடி வாக்குறுதி...!

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாரத பிரதமர் மோடி அவர்கள், 2024-க்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம்  தண்ணீர்  கொண்டு செல்லப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.