சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-விக்ரம் நாயகி

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

நடிகர் சிம்பு தற்போது ஒரே நேரத்தில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' மற்றும் சுந்தர் சியின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவற்றில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருந்தனர். இறுதியில் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி விஜய்யின் 'சர்கார்', விக்ரமின் 'சாமி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.

More News

விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' டீசர் விமர்சனம்

விக்ரம்பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவில் சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் 'நித்யா நந்தா' படக்குழுவினர்

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் வெற்றி கூட்டணியான ஜிவி பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற படத்தின் மூலம் இணைகிறது

யாஷிகாவை வச்சு செய்யும் விஜி-ரித்விகா

இதுவரை மற்றவர்களை பழிவாங்குவது போன்ற டாஸ்க் ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவிற்கும் தான் வந்துள்ளது.

செப்டம்பர் 19 முதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.