close
Choose your channels

கொரோனாவுக்கு பலியான நடிகர்-தயாரிப்பாளர்: சோகத்தில் குடும்பத்தினர்

Tuesday, June 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகினர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். அந்த வகையில் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் தொழிலதிபராக இருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.ஹாசன் என்பவர் மலையாளத்தில் துபாய்க்காரன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். இவர் சமீபத்தில் துபாய்க்கு வேலை நிமித்தமாக சென்றபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மேலும் மோசம் ஆகவே மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகர் ஒருவர் துபாயில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளது கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உயிரிழந்த எஸ்.ஏ.ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் என்பதும் ஹாசனின் மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos