வெளிமாநில தொழிலாளர்களை தூண்டிவிடும் போலி போராளிகள்: முதல்வர் ஆவேசம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் முதலமைச்சர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இரவு பகல் பாராமல் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் திடீரென கேரளாவில் உள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கோதுமை மாவு, உருளைக்கிழங்கு பருப்பு என அனைத்தும் வழங்கப்பட்டு அவர்கள் கேரள அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்த போராட்டம் நடந்தது கேரள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில போலி போராளிகள் இந்த போராட்டத்தை தூண்டி உள்ளதாகவும் கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பிடிக்காத சிலர் தான் இதனை தூண்டி விட்டதாகவும் வாட்ஸ்அப் மூலம் வெளிமாநில தொழிலாளர்களைப் ஒரே இடத்திற்கு வரவழைத்து போராட்டம் செய்ய தூண்டப்பட்டுள்ளதாகவும் போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த போராட்டத்தின் பின்னணியில் போலி போராளிகள் இருப்பதாகவும் இது குறித்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளார் இந்த நிலையில் தொழிலாளர்களை போராட்டம் செய்யத் தூண்டி விட்டதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் அதீத முயற்சியுடன் போராடி வருகின்றன என்பது தெரிந்ததே

சென்னையில் விசா வாங்க வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் போலீஸ்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு மார்ச் 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தேதியில்

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்

தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை.

டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது