தேசத்துரோக வழக்கு: நடிகை ஆயிஷாவுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையாள தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து தான் தேசத்துக்கு எதிராக எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும் லட்சத்தீவுக்கு பொறுப்பாளராக சென்ற பிரபுல் பட்டேல் குறித்து தனிப்பட்ட முறையில் தான் விமர்சனம் செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை ஆயிஷா சுல்தான் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

More News

பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த அம்ரிதா ஐயர்: வைரல் புகைப்படம்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயர் என்பது தெரிந்ததே. சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும்

இயக்குநர்- இன்ஸ்பெக்டர் வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக லிஸ்ட் போட்டு இளம் நடிகை புகார்!

மலையாள நடிகையும் உளவியல் நிபுணருமான ரேவதி சம்பத் (27) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 நபர்களின் பெயர்களை லிஸ்ட்

காவலர்களுக்கு நிவாரணத் தொகை ....! முதல்வர் உத்தரவு....!

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய காவலர்களுக்கு 5000 ரூபாயை நிவாரணத்தொகையாக வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்

கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்: விஷால் விவகாரம் குறித்து ஆர்பி சவுத்ரி எச்சரிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து தற்போது ஆர்பி சவுத்ரி விளக்கமளித்து அறிக்கை

மணிகண்டனை கைது செய்ய, மதுரை விரைந்த தனிப்படை போலீசார்.....!

மாஜி அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.