close
Choose your channels

கேரள இளம்பெண்ணின் மர்ம மரண வழக்கு: கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தியாவையே அதிர செய்த இளம்பெண் விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, தண்டனை விபரங்களை நாளை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற ஆயுர்வேத மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மாணவிக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆக பணியாற்றிய கிரண்குமாருக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு ஆண்டு மட்டுமே ஆகியிருந்த நிலையில் திடீரென விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது .

வரதட்சணை கொடுமை காரணமாக தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது உறவினர்கள் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே விஸ்மயா தனது உறவினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த காயம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் விஸ்மயா மரணத்திற்கு முன்பு கிரண்குமார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததும் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் வாதங்கள் முடிந்து அதிரடியாக இன்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதோடு அவருக்கு என்ன தண்டனை என்பது நாளை அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

இந்த வழக்கில் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.