25 வருடங்களுக்குப்பின் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி நஷ்டஈடு!!! பரப்பான பின்னணி!!!

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

 

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு நஷ்ட ஈட்டுத்தொகையாக ரூ.1.30 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதைத்தவிர தற்போது உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி ரூ.50 லட்சம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி ரூ. 10 லட்சமும் சேர்ந்து வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞான அமைப்பின் தகவல்களைத் திரட்டி ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்று உளவு பார்ப்பதாக கடந்த 1994 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக விஞ்ஞானி நம்பி நாராயணன் தவறுதலாகச் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் நம்பி நாராயணனோடு சேர்த்து 6 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வழக்கின் பல கட்ட விசாரணைக்குப் பின்னர் நம்பி நாராயணன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கேரள அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1.30 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனால் அவர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் முன்வந்தார்.

தற்போது அந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில் 1.30 கோடி ரூபாயோடு சேர்த்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேசிய உரிமை ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பில் ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறது. ஆக தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 சோத்து மேலும் 60 லட்சம் வழங்க கேரள அர

More News

பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்-பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை!!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தயவுசெய்து இப்படி யாரும் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்

தன்மீது வெறித்தனமாக இருக்கும் ரசிகர் ஒருவரின் செயலைப் பார்த்து தயவு செய்து இனிமேல் யாரும் இப்படி செய்ய வேண்டாம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும்

ஆளுக்கொரு அறையில் தீக்குளித்த அம்மா-அப்பா: அதிர்ச்சியில் குழந்தைகள்

அம்மா, அப்பா இருவரும் ஆளுக்கு ஒரு அறையில் தீக்குளித்து கொண்டதால் குழந்தைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது 

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: யோகிபாபுவின் மறுப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில்

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டி!!! பரபப்பு நிகழ்வு!!!

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்