நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்லைன் விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் சமீபத்தில் கூட கோவையைச் சேர்ந்த ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை இளைஞர்கள் பலர் விளையாடி வருகின்றனர் என்பதும் லட்சக்கணக்கில் அவர்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த விளையாட்டிற்கு தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை பாலி வடக்கன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கேரள அரசு உடன் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது

அதுமட்டுமின்றி இந்த விளையாட்டின் தூதர்களாக இருக்கும் நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது

ஆன்லைன் விளையாட்டு வழக்கில் நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்: பிறந்த நாளில் கிடைத்த ட்ரீட்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய

சிம்பு படத்தில் வில்லனாகும் சூப்பர்ஹிட் பட இயக்குனர்!

நடிகர் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் 'மாநாடு' என்ற படத்தில் நடித்து வருகிறார்

கே.எஸ்.ரவிகுமார் படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து!

நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடங்களாக ஒருவரை காதலித்து வரும் நிலையில் தனது  காதலரின் பிறந்த நாளை அடுத்து உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார் 

திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தது