close
Choose your channels

திருமணமான பெண்களை குறிவைத்து 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்!

Monday, June 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 25 வயது பிரதீஷ்குமார் என்பவர் சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்ணின் கணவரிடம் முதலில் பெண் குரலில் பேசி அதனை ரிகார்ட் செய்து, பின்னர் அந்த உரையாடலை அவருடைய மனைவிக்கு அனுப்புவார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும். இதனை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் அவரிடம் பழகி, பின்னர் அவரிடம் ஒரு கட்டத்தில் வீடியோகால் செய்து பேசுவார்.

இந்த வீடியோகாலை பதிவு செய்து அதில் ஆபாச பெண்களின் உடல்களை மார்பிங் செய்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறும் இல்லையேல் அந்த ஆபாச வீடியோவை அவரது கணவருக்கு அனுப்புவதாகவும் மிரட்டி தனது காரியத்தை சாதித்து கொள்வார். இதேபோல் சுமார் 50 பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் ஒரு பெண் தைரியமாக போலீசில் புகார் கொடுக்க, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மார்பிங் செய்யப்பட்ட ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.