close
Choose your channels

விமான நிலையத்தில் குட்டித்தூக்கம்: ஃபிளைட்டை மிஸ் செய்த இந்தியரால் துபாயில் பரபரப்பு

Sunday, July 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாயில் இருந்து இந்தியா திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் ஒருவர் ஒரு குட்டி தூக்கம் போட்டதால் விமானத்தை தவற விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் தங்கி உள்ள இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் அரபு நாடுகளில் இருக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களை அழைத்துவர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களை அழைத்து வர விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானத்தில் 427 பேர் பயணம் செய்யவிருந்தனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். மேலும் அவர் விமானம் கிளம்புவதற்கு சிலமணி நேரம் முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்து வழக்கமான பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டார். 

அதன் பின் அவர் விமானத்துக்காக காத்திருக்கும் இடத்தில் அமர்ந்த போது லேசாக கண் அயர்ந்து விட்டார். அதன் பின்னர் திடீரென விழித்து பார்க்கும்போது அவர் ஏறவேண்டிய விமானம் புறப்பட்டுச் சென்று விட்டதாக செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். அவருடைய விசாவும் காலாவதியாகிவிட்டது என்பதால் அவரால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. மேலும் விமானச் சீட்டு வாங்குவதற்காக அவர் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் செலவு செய்து விட்டார் என்பதால் அவரிடம் சாப்பிடக் கூட பணம் இல்லாத நிலை இருந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த துபாயில் உள்ள கேரள அமைப்பு ஒன்று அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்து உதவியது. இதுகுறித்து விமான பயண ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது ’விமானம் கிளம்பும் முன் ஷாஜகானை பல இடங்களில் தேடியதாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அவரை விட்டுவிட்டு விமானம் கிளம்பி சென்று விட்டதாகவும் கூறினார். இருப்பினும் அடுத்த விமானத்தில் அவரை கேரளாவுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு குட்டித் தூக்கம் போட்டதால் விமானத்தை தவற விட்ட இந்தியர் ஒருவரால் துபாயில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.