நேற்று பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி இன்று மரணம்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

நேற்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது கேரள எம்பி அகமது என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்ததை அடுத்து நேற்று அவர் மீண்டும் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகமது உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அகமது உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இன்று அவரது உடல் சொந்த மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரவிந்தசாமியுடன் முதல்முறையாக இணையும் நந்திதா

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'போகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ...

ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை...

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்...

டிரம்ப் அதிரடியால் கமல், விஜய், விக்ரம், தனுஷ் படங்களுக்கு பிரச்சனை?

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகிக்க முடியாத அளவில் அவருடைய அறிவிப்புகள் அதிரடியாக உள்ளது...

இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்த்த அதிபர் டிரம்ப்

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் கனவு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். லட்சக்கணக்கில் சம்பளம், வசதியான வாழ்க்கை ஆகியவையே இதற்கு காரணம். இதனால்தான் தினந்தோறும் அமெரிக்க தூதரகங்கள் முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதை பார்த்து வருகிறோம்....