பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது. இதுகுறித்து பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர்களை கைது செய்தனர்.
எனினும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சுனில்குமார் தலைமறைவாக இருந்ததாவும், அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டது.,
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுனில் சற்று முன் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாகவும், நீதிமன்றத்திற்கு உள்ளே அவர் செல்லும் முன்பே அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுனில்குமாரிடம் விசாரணை செய்தால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இன்னும் யார் யார் இருக்கின்றார்கள் என்ற உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

More News

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். விஷால்

நடிகர் சங்க செயலாளரும், பிரபல நடிகருமான விஷால் தற்போது 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சிகிச்சையின்போது ஜெயலலிதா புகைப்படம் வெளியிடாதது ஏன்? அப்பல்லோ பதில் மனு தாக்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது...

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரும்பும் அஜித்தின் 'வரலாறு'

மூன்று வேடங்களில் தல அஜித் மற்றும் அசின் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம் 'வரலாறு.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த டிராபிக் ராமசாமி வழக்கில் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்...

அஜித் தான் இதற்கு முழு காரணம். சாந்தனு பாக்யராஜ்

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகர், நடிகைகளும், வளர்ந்து வரும் நட்சத்திரங்களும் தங்கள் படங்களின் ரிலீசின்போது அஜித் குறித்து ஏதாவது சொல்லி தங்கள் படங்களுக்கு புரமோஷன் செய்வதை வழக்கமாகி கொண்டுள்ளனர்