தாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Thursday,June 13 2019]

ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பதை இன்னும் இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இவருடைய செயலுக்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற இளைஞர் தனது தாய், தந்தையிடம் அனுபவித்த கொடுமைகளை நேரில் கண்டவர். கோகுல் பத்தாவது படிக்கும்போது அவரது தாய் வேறு வழியின்றி கோகுலுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த வயதிலேயே தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார். இதனை அவர் பலமுறை தாயிடம் கூறியபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோகுலில் தாய் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ஒருவர் தனது தாயை மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார். இதனையடுத்து தாயிடம் மறுமணம் குறித்து கோகுல் பேசியுள்ளார். முதலில் மறுத்த அவர் பின்னர் மகனின் வற்புறுத்தலுக்கு பின் ஏற்றுக்கொண்டார். இந்த மறுமணம் குறித்து கோகுல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எனது தாயாரின் மறுமணம் குறித்து இங்கு பதிவு செய்யலாமா? என பலமுறை யோசித்தேன். மறுமணம் என்பது இன்னும் பலருக்கு தடையாகவே உள்ளது. என் நீண்ட நாள் கனவு தற்போதுதான் நிறைவேறியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் பாராட்டுதல்களை குவித்து வருகின்றனர்.

More News

கார்த்தி படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாச பதிவு செய்த பெண் கைது

நடிகர் விஷாலுடன் பள்ளிச்சிறுமி ஒருவரை ஆபாசமாக இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது: 'நேர் கொண்ட பார்வை டிரைலர்விமர்சனம்:

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ராஜராஜ சோழன் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் ரஞ்சித்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழ மன்னர் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் . 

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: ரஞ்சித்துக்கு கருணாஸ் எச்சரிக்கை

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'சோழ மன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார்.