நாங்கள் பொறுக்கிகளா? அதிகார திமிருடன் இருப்பவர்களுக்கு எதுவும் புரியாது: ஜெயமோகனுக்கு ஒரு பதிலடி..!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

எழுத்தாளர் மற்றும் சினிமா திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை பார்த்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்றும் குறிப்பாக மலையாள பொறுக்கிகள் என்றும் குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் ஜெயமோகனின் கருத்துக்கு மலையாள எழுத்தாளர் உண்ணி என்பவர் கடுமையாக கண்டித்து உள்ளார். ஜெயமோகனின் எழுத்தில் விஷமத்தனம் இருப்பதாகவும் குடிப்பவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்பது பார்ப்பனியத்தின் வாதம் என்றும் மலையாளிகள், கள் இறக்கும் தொழில் செய்தாலும், ஆண் பெண் பேதமின்றி மது அருந்தினாலும் நாகரிகமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் நண்பர்களின் அடித்தட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் கூறும் கதை என்றும் அவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது அவர்கள் நண்பனுக்காக உயிரையே கொடுக்க வந்தவர்கள் என்றும், அது ஜெயமோகன் கண்ணில் படவில்லையா என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திலும் சரி கேரளாவிலும் சரி இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழர்களும் மலையாளிகளும் பரஸ்பரம் உதவி செய்து கொண்டார்கள் என்றும் அதெல்லாம் அதிகார திமிருடன் இருக்கும் உங்களுக்கு புரியாது என்றும் அவர் கூறியுள்ளார். கேரளாவில் திரைக்கதை எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் விமர்சனம் செய்திருப்பதாகவும் கேரளாவை பற்றி பொய்களை சொன்ன ‘தி கேரளா ஸ்டோரீஸ்’ படத்தின் தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவை நான் பார்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

More News

'கோட்' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' பட பிரபலம்.. அப்ப நிச்சயம் ஒரு ஹிட் இருக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 'மாஸ்டர்' படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதாக

எஸ்.எஸ்.ராஜமெளலி சொல்லியும் கேட்காத அனுஷ்கா, மலையாள இயக்குனருக்காக செய்த செயல்..!

நடிகை அனுஷ்கா திடீரென உடல் எடை கூடிய நிலையில் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படத்தில் நடிக்கும் போது அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எஸ்.எஸ்.ராஜமெளலி  எத்தனையோ முறை கூறியும்,

அடுத்த படம் ஆரம்பிக்கும் வரை ஒரே ரொமான்ஸ் தான்.. அட்லி-ப்ரியாவின் முத்த போட்டோஷூட்..!

இயக்குனர்  அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா  அட்லி இருவரும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள நிலையில்

அண்ணாமலைக்கு நள்ளிரவு 2 மணிக்கு போன் பண்ணிய சரத்குமார்.. அதிரடி முடிவெடுக்க என்ன காரணம்?

நடிகர் சரத்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நள்ளிரவு 2 மணிக்கு போனில் அழைத்து முக்கிய முடிவை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

'எஸ்.கே 23' பட ரிலீஸ் தேதியை லாக் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.. செம்ம வசூலுக்கு வாய்ப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்.கே 23' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது