ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை ’கேஜிஎப் 2’ திரைப்படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் முதல் நாள் முதலே வசூலில் சாதனை செய்து வருகிறது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை செய்திருப்பதாகவும் கடந்த ஒரு வாரத்தில் இந்தியில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 715 கோடிகளை வசூல் செய்துள்ள ’கேஜிஎப் 2’ திரைப்படம் மிக விரைவில் ஆயிரம் கோடி வசூல் செய்து ‘ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூலுக்கு இணையாக வசூல் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகி ’கேஜிஎப் 2’ திரைப்படம் நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் படத்தின் வசூலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ’கேஜிஎப் 2’ திரைப்படத்தின் பட்ஜெட் யாஷ், பிரசாந்த் நீல் சம்பளம் இல்லாமல் ரூ.100 கோடி என்ற நிலையில் அதைவிட பல மடங்கு லாபத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

1970களில் இருந்த அண்ணா சாலை: விஷால் படத்திற்காக போடப்படும் செட்!

கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்த அமைப்பில் விஷால் படத்திற்காக செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'அரபிக்குத்து' பாடலுக்கு மாஸ் நடனமாடிய பேட்மிண்டன் வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

உலக நாயகனின் 'விக்ரம்' படம் குறித்த மாஸ் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்சமா பொண்ணை பார்த்தவுடன் பஞ்சர் ஆனேன்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' சிங்கிள் ரிலீஸ்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும்

இளையராஜாவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?

பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்கரையும் ஒப்பிட்டு சமீபத்தில் இளையராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேசியதாக