மது குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்… சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல இயக்குநர்!

கன்னட சினிமா இயக்குநராக அறிமுகமாகி தற்போது கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா இயக்குநராக உலகம் முழுக்க பிரபலம் அடைந்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னுடைய குடிப்பழக்கம் பற்றி வெளிப்படையாகக் கூறிய கருத்துகள் சமூகவலைத் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்1“ திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது. இதையடுத்து “கேஜிஎஃப் 2 “ திரைப்படம் உருவாக்கப்பட்டு இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தப் படத்தை உலகம் முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வசூல் ரீதியிலும் படம் வெற்றியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது, கதைகளை எழுத நான் அடிக்கடி மது அருந்துவேன். மறுநாள் காலையில் நிதானமாக இருக்கும்போது அதனைப் படித்து பார்ப்பேன். அது சிறப்பாக இருந்தால் திரைக்கதையாக எழுதுவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு பெரும்பாலும் குடிப்பழக்கம் இருக்கும் என்ற கருத்துக் கணிப்பு இருந்துவருகிறது.

இப்படியிருக்கும்போது இயக்குநர் பிரசாந்த் நீல் தனக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்து சமூகவலைத் தளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

More News

இதுவரை தமிழ்ப்படம் வெளியாகாத நாடு: முதல் படமே 'பீஸ்ட்' தான்!

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாட்டில்  முதல் முறையாக 'பீஸ்ட்' என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனை!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.26 கோடி பிளாட்,  ரூ.1.3 கோடி ஆடிக்கார்: பரிசுமழையில் குவிந்த ரன்பீர்-ஆலியா பட் ஜோடி!

பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்

இரண்டாவது திருமணத்திற்கு நாகசைதன்யா போட்ட ஒரே ஒரு கண்டிஷன்!

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தனது பெற்றோரிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .

த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வு: முறைப்படி செய்யப்பட்ட ஈமச்சடங்கு!

பிரபல நடிகை த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வை அடுத்து முறைப்படி ஈமச்சடங்கு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .