300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தாரா? ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கேஜிஎஃப் நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தத் திரைப்படம் வெளிவந்ததில் இருந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது உலக அளவில் பிரபலம் அடைந்திருக்கும் நடிகர் யாஷ் குறித்த ஒரு தகவல் சமூகவலைத் தளத்தில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதில் நடிகர் யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா என்றும் நாடகங்களில் யாஷ் என்ற பெயரில் அவர் நடித்து பிரபலமானதால் யாஷ் என்றே பெயரே நிலைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மைசூரை சேர்ந்த நடிகர் யாஷ் சிறிய வயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாக வேண்டும் என்று விரும்பினாராம். பள்ளிப் பருவத்தில் என்னவாக ஆகப்போகிறாய் என்று ஆசிரியர் கேட்டால்கூட யாஷ் நான் நடிகராவேன் என்றுதான் பதிலளிப்பாராம். இந்தப் பதிலைக் கேட்ட மற்ற மாணவர்கள் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் கல்லூரி பருவத்திலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிய யாஷ் தொடர்ந்து தனது சினிமா ஆசையை பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதை அவர்கள் விரும்பாததால் 300 ரூபாயுடன் மைசூரில் இருந்து பெங்களூருவிற்கு வந்த யாஷ் அங்குள்ள நாடக கம்பெனி ஒன்றில் பேக் அப் மேனாக பணியாற்றத் துவங்கியுள்ளார்.

அதாவது அந்த நாடகக் கம்பெனியிலும் யாஷிற்கு பெரிய வேடங்கள் எதுவும் கிடைக்காமல் தினம்தோறும் நடைபெற இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். காரணம் நாடகத்தில் நடிக்கப்போகும் ஏதோ ஒரு நபர் திடீரென்று வரவில்லையென்றால் அவர்களுக்குப் பதிலாக யாஷ் நடித்திருக்கிறார். இப்படியே பல்வேறு தடைகளைத் தாண்டிவந்த யாஷ் சினிமாவிலும் பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டியே தற்போது ராக்ஸ்டார் எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

இதையடுத்து 300 ரூபாயுடன் மைசூரில் இருந்து ஓடிவந்த யாஷின் கேஜிஎஃப்2 திரைப்படம் வெறும் 5 நாட்களில் 600 கோடிகளைக் குவித்திருப்பது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News

'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்காரா: ஆரம்பமே மாஸ் தான்!

'சூரரைப்போற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து உள்ளது என்பதும் இந்த படத்தை 'கே.ஜி.எஃப்' மற்றும் 'கேஜிஎப் 2 ' படங்களை தயாரித்த

செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை 'கேஜிஎப் 2'  திரைப்படம்

1970களில் இருந்த அண்ணா சாலை: விஷால் படத்திற்காக போடப்படும் செட்!

கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்த அமைப்பில் விஷால் படத்திற்காக செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'அரபிக்குத்து' பாடலுக்கு மாஸ் நடனமாடிய பேட்மிண்டன் வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.