close
Choose your channels

தமன்னாவுக்கு படுதோல்வி: தப்பிப்பாரா நயன்தாரா

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சக்ரி டோலட்டி இந்தி மற்றும் தமிழில் இயக்கிய 'காமோஷி' மற்றும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படங்கள் ஜூன் 14ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் தமிழில் இந்த படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியான 'காமோஷி' திரைப்படம் பாலிவுட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டில் வலம் வரலாம் என்ற தமன்னாவின் கனவு பொய்த்தது. அதேபோல் பாலிவுட்டில் பிரபுதேவாவுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும் 'காமோஷி' திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

இந்த நிலையில் இதே படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் தமிழில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்தியில் தோல்வி அடைந்திருந்தாலும் நயன்தாராவுக்கு என தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் இருப்பதால் தமிழில் இந்த படம் வெற்றியடைவது மட்டுமின்றி மாஸ் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மிஸ்டர் லோக்கல்' தோல்வியை 'கொலையுதிர்க்காலம்' வெற்றியின் மூலம் நயன்தாரா சரிகட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.