ரொம்ப அவசரம், உடனே எனக்கு யாராவது உதவி செய்யுங்கள்.. பதட்டத்துடன் குஷ்பு பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'தனக்கு ரொம்ப அவசரம்' என்றும், 'தனக்கு உடனடியாக யாராவது உதவி செய்ய முடியுமா?' என்றும் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவின் எக்ஸ் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், குஷ்பு தனது Instagram பக்கத்தில், 'எனது Twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. யாராவது அதை மீட்டெடுக்க வழி தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். இது மிகவும் அவசரம்,' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 'நான் எனது Twitter பக்கத்தை லாகின் செய்ய முடியவில்லை. எனது ஐடி மற்றும் பாஸ்வேர்டையும் ஏற்கவில்லை. என்னால் என்னுடைய ட்விட்டர் பக்கத்திற்குள் செல்லவே முடியவில்லை. கடந்த 9 மணி நேரமாக, எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் செய்தி, அப்டேட், பதிவு ஆகியவை என்னால் செய்யப்படவில்லை. இதை சரி செய்ய முயற்சி கொண்டு இருக்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். எனது Twitter பக்கத்தில் ஏதேனும் அசாதாரணமான செயல்பாடுகள் ஏற்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். மீண்டும் ட்விட்டரில் சந்திப்போம். அதுவரை, நான் இன்ஸ்டாவில் இருக்கிறேன்,' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு, அதில் கிரிப்டோ கரன்சி குறித்த பதிவுகள் பதிவானது. இந்த நிலையில், தற்போது குஷ்புவின் பக்கமும் ஹேக் செய்யப்பட்டிருப்பது, திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com