close
Choose your channels

"உங்க அம்மாவைப் பார்த்து இந்த கேள்வியைக் கேளுடா". குஷ்பு கொந்தளித்தது ஏன்?

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com



சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு சுறுசுறுப்புடன் இருக்கும் செலிபிரிட்டிகளில் ஒருவர் குஷ்பு. அரசியல், சினிமா, சமூக பிரச்சனை என அவர் போடும் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதுண்டு.

ஆனால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டாக் ஷோ ஒன்றை நடத்த ஆரம்பித்ததில் இருந்து குஷ்புவுக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுநாள் வரை தனது நிகழ்ச்சி குறித்த கருத்துக்களுக்கு பொறுமையாக பதில் கூறி வந்த குஷ்பு, இன்று திடீரென கொந்தளித்துவிட்டார்.

அநாகரீகமான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த குஷ்பு, ஒரு சிலருக்கு அழுத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது, அவர்கள் ஒரு பெண்ணில் இருந்து தான் பிறந்தவர்கள் என்றும், நாளை அவர்களுக்கும் பெண் குழந்தை பிறப்பாள் என்றும், நன்றி என்று பதிவு செய்துள்ளார்.

இதேபோன்ற இன்னொரு அநாகரீகமான கேள்விக்கு 'உங்க அம்மாவைப் பார்த்து இந்த கேள்வியைக் கேளுடா' என்று கொந்தளித்துள்ளார் குஷ்பு.

குஷ்புவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பாடகி சின்மயில் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.