பாஸ்போர்ட் விவகாரம். குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை அவர் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பிக்க மறுத்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ' மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 1993-இல் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை சில நிபந்தனைகளின் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதால், குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என மறுப்பதை சட்டப்படி ஏற்க முடியாது. எனவே நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை மண்டல அதிகாரி புதுப்பித்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அதேசமயம், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்ற பின், குஷ்பு வெளிநாடு செல்லும் போது, எந்த நாட்டுக்கு செல்கிறார், எப்போது நாடு திரும்புவார் ஆகிய விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.