ஷங்கர் - ராம்சரண் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இந்த படத்தில் நாயகியாக கைரா அத்வானி நடிக்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வரும் கைரா, மகேஷ் பாபுவுடன் ’பாரத் அனு நேனே’ என்ற திரைப்படத்திலும் ராம் சரண் தேஜாவுடன் ’வினய விதேய ராமா’ என்ற திரைப்படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் கைரா அத்வானி, ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆலியா பட் நடிக்க இருப்பதாகவும், மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது கைரா அத்வானி தான் நாயகி என்று அறிவிக்கப்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி? இந்த உண்மையை நம்ப முடிகிறதா?

“நாம் இருவர், நமக்கு இருவர்“ என்பதே இன்றையக் காலக்கட்டத்தில் பெரும் சிரமமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த நாடும் எதிர்த்த ஒலிம்பிக் காதல்… தேசங்களை கடந்து வென்ற சுவாரசியம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ஒட்டி,

தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.7,000 ஊக்கத்தொகை? செம ஆஃபரை அறிவித்த நாடு!

கொரோனா நோய்த்தொற்று அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி அமெரிக்காவில் மக்கள் கடந்த சில மாதங்களாக முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடமாடும் காட்சியை பார்க்க  முடிந்தது

கீழடி வெள்ளி நாணயம் இவ்வளவு பழமையானதா? வியப்பூட்டும் ஆராய்ச்சி தகவல்!

சமீபத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சின்னங்களுடன் கூடிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்ததைப் பற்றி தமிழ் ஆய்வாளர்கள்,

பெண்ணடிமை முடைநாற்றம் வீசிய காலத்தில் புரட்சி செய்தவர் முத்துலட்சுமி- முதல்வர் டிவிட்!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் சட்டமன்ற உறுப்பினர், பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்,