கிச்சா சுதீப்பின் பிரமாண்ட 3D திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் நடித்த பிரமாண்ட திரைப்படமான “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பலர் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படம் 3டி-ல் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது: “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 3-D பதிப்பின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எங்களின் ரசிகர்கள் ஆரம்பம் முதலே மிகப்பொறுமையாகவும் கனிவுடனும், எங்களிடம் மிகுந்த அன்புடனும் இருந்தார்கள். அவர்களின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு மிகவும் தெளிவாக இருந்தது, அது ஒரு தயாரிப்பாளருக்கான வெற்றியில் பாதியை நிறைவேற்றிவிட்டது. அவர்களிடமிருந்து அளவற்ற ஆதரவு கிடைத்ததற்கு, நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த படத்தின் மூலம், மர்ம-த்ரில்லர் வகையை ஒரு புதுமையான தளத்தில் மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்.


இயக்குநர் அனூப் பண்டாரி கூறியதாவது:.
“விக்ராந்த் ரோணா” திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரமாண்ட உருவாக்கமும் 3-D பதிப்பு தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். நாங்கள் அறிமுகம் செய்யும், உலகின் புதிய நாயகனை, விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 அன்று உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்.

“விக்ராந்த் ரோணா” திரைப்படம் 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. அனூப் பண்டாரி இயக்கத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்

'புஷ்பா' ரிலீசுக்கு முன் அல்லு அர்ஜூன் செய்த மகத்தான செயல்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில். உள்பட பலர் நடித்த 'புஷ்பா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விஜய் சேதுபதி!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை விஜய் சேதுபதி

பாவனி-அபினய்யை சந்தேகப்படுறீங்கன்னா, அப்போ இவங்களை? கேள்வி எழுப்பிய மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் இருக்கும் என்பதும் ஆனால் அந்த காதல் அந்த சீசன் முடிந்தவுடன் காணாமல் போய் விடும் என்பதையும் பார்த்து வருகிறோம். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா

ஹேர் ஸ்டைலில் புதுமை காட்டி ரசிகர்களை ஈர்த்த “மாநாடு“ நடிகை!

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்